கரூர் : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் 10.06.2022 தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் B.E. Aeronautical Engineering படிப்பை முடித்துவிட்டு மும்பையில் ரிசர்வ் Bank (RBI)-ல் மேலாளராக பணி புரிந்துள்ளார். பின்பு 2016 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்வாகி(IPS), மாமல்லபுரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து பின்னர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி அதன்பின் சென்னை மாநகரத்தில் மாதவரம் மற்றும் வண்ணாரப்பேட்டை மாவட்டங்களில் துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார். தற்பொழுது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.