சேலம் : சேலம் ஏற்காடு தாலுகா செம்மநத்தம் பகுதியில், கலெக்டர் கார்மேகம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார். அதில் அனுமதியின்றி மரக்கட்டைகள் வெட்டி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்து அவற்றை வனத்துறையினரிடம் அவர் ஒப்படைத்தார். இதையடுத்து மரக்கட்டைகள் வெட்டி கடத்தி லாரியில் கொண்டு வந்த 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்கட்டைகள் கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்து கலெக்டர் கார்மேகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.