சேலம் : கடந்த (08/03/2013), தேதி மகுடஞ்சாவடி காவல் நிலைய சரகம் இளம்பிள்ளை பகுதியில் அண்ணாதுரை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பிடிக்கும் போது கோவிந்தராஜ்(27), இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜி, விஜி, அவரது நண்பர் கொழுஞ்சனூர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்காரன் மேடு கொழிஞனூர் பகுதியை சேர்ந்த கேசவன் ஆகியோர் தகராறில், ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியர் கோவிந்தராஜ் (27), மற்றும் அவரது சக ஊழியரான மோகன் (40), ஆகியோர் உஷாராணி ஹோட்டலுக்கு சாப்பிட சென்றபோது தகராறில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட குற்றவாளிகள் தாக்கியதில் கோவிந்தராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மேற்கண்ட நபரை கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிகள் மூன்று பேரையும் மடங்கஞ்சாவடி காவல் நிலையத்தில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ் வழக்கில் குற்றப்பத்து குற்றப்பத்திரிக்கை விரைவாக தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில், இருந்த நிலையில் குற்றவாளி ராஜி இறந்து விட்டார். மற்ற குற்றவாளிகளின் மீது சாட்சிகளின் அடிப்படையில், குற்றம் (27 /07 /2022) ஆம் தேதி சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி ஏ .எம் ரவி, குற்றவாளிகள் கேசவன், விஜி குற்றவாளிகளுக்கு ஆயுள் ஆயுள் தண்டனையும் அபராதம் தலா ரூபாய் ஐந்தாயிரம் தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை சிறையில்,அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்