இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 19.04.2004- ல் காவல் வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 21.10.2021 முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து செயல்படாமல் இருந்த எரிபொருள் நிரப்பும் நிலையம் தற்சமயம் புதுப்பிக்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களால் இன்று (11.03.2024) திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் காவல்துறை வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் செலவு குறைக்கப்பட்டு, அரசின் பணமும் சேமிக்கப்படுகிறது.