மதுரை :மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில், அங்கு பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்து 6 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், குரு சுராஜ் (19), ஹரிஹரன் (21), அஜய் (21), பாலகுமாரன் (21), ராகுல் (19), கணேஷ் சிங் (19) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை மற்றும் வழிப்பறி செய்ய அந்த கும்பல் திட்டமிட்டு பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது . அவர்களை கைது செய்த சுப்பிரமணியம் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி