சேலம் : சேலம் மாவட்ட ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த முருகேசன் (35), என்பவரின் தொலைபேசிக்கு (9944828370) என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட நபர் தான் ஆதித்ய பிர்லா, பைனான்ஸ் எல்,டி,டி லிருந்து பேசுவதாகவும், தங்களுக்கு ரூபாய் பத்து லட்சம் லோன் தருவதாகவும் கூறி ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படங்கள் மற்றும் இன்சூரன்ஸ் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் பிராசசிங் தொகையாக ரூபாய் 40 ஆயிரம் பெற்றுக் கொண்டு லோன் தராமல் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏமாற்றிய நபரிடமிருந்து பணத்தை மீட்டு தர வேண்டி புகார் மனு மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. அபினவ் இ.கா.ப, அவர்களின் அறிவுரைப்படி சேலம் மாவட்ட கணினி சார் குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறையினரின் துரித நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர் இழந்த தொகையை (05 /08/ 2022) இன்று மனுதாரரின் கணக்கில் வங்கிக் கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது.
மேலும் இதுபோன்ற அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் போலியான இணைதள இணையதள செயலிகள் மற்றும் குறைந்த விலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதையோ லோன் தருவதாகவும், தொலைபேசிக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களின் வங்கி விவரம் மற்றும் otp களை யாரிடமும் பகிர வேண்டாம் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால், உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பர் 1930 இந்த எண்ணுக்கு உடனே புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்டு தர இயலும் எனவும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்