மதுரை : ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கீரைத்துறை சிந்தாமணி ரோடு பழைய செக்போஸ்ட் அருகே சந்தேகப்படும்படியாக ஆட்டோவில் சிலர் பதுங்கி இருப்பதாக கீரைத்துறைபோலீசாருக்கு தகவல் கிடைத்தது சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவை சுற்றி வளைத்து ஆட்டோவில் இருந்தவர்கள் அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்மாதவன் 21 கீரத்துரை மூக்க நாடார் சந்து பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்து 20 இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர் .அவர்களுடன் இருந்த முத்திருளாண்டிமற்றும் ஒருவர் தப்பி ஓடிவிட்டனர் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து சோதனை நடத்தியபோது ஆட்டோவில் பெரியவாள்ஒன்றும் ககத்தியும் இருந்தது .அவைகளையும் போலீசார்கைப்பற்றினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி