திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியை சேர்ந்த முருகன் மகன் இலங்காமணி என்ற தமிழ்செல்வன் (30), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பக்கப்பட்டியை சேர்ந்த பிரமுத்து மகன் வடிவேல்முருகன் (23), இவர்கள் 2 பேரும் நெல்லை பேட்டை பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி, அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.