தேனி: 79 – வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங்,இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். உடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா,இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர், தேனி மாவட்டம், செல்வி. P.சீதாலட்சுமி DSP(Trg) அவர்கள் தலைமையில் காவல் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.