புதுக்கோட்டை : புதுக்கோட்டை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. திரு.சரவண சுந்தர், புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு திருமதி.வந்திதா பாண்டே, மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமீபத்தில் ரூ.34 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன், தலைமையிலான தனிப்படையினரை டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பாராட்டினார்.