புதுக்கோட்டை: சட்டவிரோதமாக 3350 லாட்டரி சீட்டுகள் விற்ற நபரை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலிசார் சோதனை செய்ததில் மேலக்காடு பேட்டை வாட்டர் டேங்க் அருகே லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 3350 லாட்டரி சீட்டுகள் கைப்பற்றி வழக்குப்பதிந்து எதிரியை சிறையில் அடைத்தனர்.
சட்டத்துக்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர்களை பிடித்து சிறப்பாக செயல்பட்ட தலைமை காவலர் 1022 திரு.ச.எசேக்கியா
முதல்நிலை காவலர் 1543 திரு.ந.ஹரிகிருஷ்ணன் மற்றும் காவலர் 2044 திரும.செல்வம் ஆகியோரை இன்று 06.09.2021-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்கும், நலனிற்கும்
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை