சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS., அவர்களின் உத்தரவின் படி மானாமதுரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் மானாமதுரை காவல் ஆய்வாளர் திரு.சேது மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.மாரிக்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலிசார்கள் மானாமதுரை அருகே உள்ள பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில், அன்னவாசல் புதூர் செல்லும் ரோட்டில் ஆள் இல்லாமல் பூட்டப்பட்ட வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த கிளங்காட்டூரைச் சேர்ந்த தவமணி, நாகேஸ்வரன், கார்த்திக், ராஜேஷ் ஆகிய 4 நபர்கள் மீது u/s.4(1)(g)TNP Act-ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.