புதுக்கோட்டை : புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த மேற்படி லாரியை Renault Triber TN 69 BL 5555 என்ற காரில் வந்து வழிமறித்து லாரி ஓட்டுநரான ஹரி (40) த/பெ. வைகுண்டம், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம் என்பவரை தாக்கி, அவரையும் லாரியையும் கடத்தி சென்ற வழக்கில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் 1) ஞானராஜ் ஜெபசிங் (39) த/பெ. செல்லப்பாண்டியன், அன்னை தெரசா நகர், தூத்துக்குடி, 2) விஷ்ணுபெருமாள் (26) த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி, 3) பாண்டி (21), த/பெ. முனியசாமி, நேசமணி நகர், முள்ளக்காடு, 4) மாரிமுத்து (எ) மாணிக்கம் (30), த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், தூத்துக்குடி, 5) செந்தில்முருகன் (35), த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 6) ராஜகுமரன் (26), த/பெ. துரைகிருஷ்ணன், எம்.கே.பி நகர், பாளையங்கோட்டை, 7) மனோகரன் (36) த/பெ. சேகர், பிள்ளையார் கோவில்தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி ஆகிய 7 பேரையும் கைது செய்து ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் எதிரியான ஞானராஜ் ஜெபசிங் என்பவர் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கின் எதிரிகளான மாரிமுத்து (எ) மாணிக்கம், செந்தில்முருகன், ராஜகுமரன் மற்றும் விஷ்ணுபெருமாள் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் அவர்களும்,
கடந்த 24.11.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கார்த்திக் (19), த/பெ. காளிதாஸ், வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி மற்றும் சின்னராஜ் (34), த/பெ. முத்துபாண்டி, வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி ஆகிய இருவரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான கார்த்திக் மற்றும் சின்னராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி அவர்களும்,
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் சீனிவாசன் (43), த/பெ. சுடலைமுத்து, பன்னீர்குளம், கயத்தாறு, என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி சீனிவாசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் அவர்களும்,
குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் அஜித் (23), த/பெ. சிலுவை இருதயம், சுனாமி காலனி, மணப்பாடு என்பவரை குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி அஜித் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் 1) விஷ்ணுபெருமாள், த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி, 2) மாரிமுத்து (எ) மாணிக்கம், த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், தூத்துக்குடி, 3) செந்தில்முருகன், த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 4) ராஜகுமரன், த/பெ. துரைகிருஷ்ணன், எம்.கே.பி நகர், பாளையங்கோட்டை, 5) கார்த்திக், த/பெ. காளிதாஸ், வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி, 6) சின்னராஜ், த/பெ. முத்துபாண்டி, வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி, 7) சீனிவாசன், த/பெ. சுடலைமுத்து, பன்னீர்குளம், கயத்தாறு மற்றும் அஜித், த/பெ. சிலுவை இருதயம், சுனாமி காலனி, மணப்பாடு ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 8 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருள் வழக்குகளில் ஈடுபட்ட 22 பேர் மற்றும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 22 பேர் உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 191 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.