கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்¸ இருளர்பட்டி மலை கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற மாணவி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இருளர்பட்டி மலை கிராமத்திலிருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதனையறிந்த தேன்கனிக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. சங்கீதா அவர்கள் நேரில் சென்று பாராட்டி¸ அவருடன் செல்பி எடுத்து கொண்டார். மேலும் இருளர்பட்டி கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களையும் வழங்கினார்.