புதுக்கோட்டை: திருச்சி மத்திய மண்டல காவல்துறையின் கட்டுப்பாடில் வரும் புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகம் கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழ்வதற்கான விழிப்புணர்வு முகாம் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணம்பட்டி கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், கிராமத்தில் கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு தற்பொழுது மனம் திருந்தி வாழ்ந்து வரும் பயனாளிகள் சந்திரா ராஜப்பன், தனபால், பவுன்ராஜ் ஆகியோருக்கு தென்னை மரக் கன்றுகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர் வழங்கினார்.
கிராம பொது மக்களுக்கு கிராம கலைக்குழு, மூலமூம் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கியும், கட்டணமில்லா தொலைபேசி எண்10581 பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன்க்கு கிருஷ்ணம்பட்டி கிராம பொதுமக்கள் மரியாதை செலுத்தியும் கௌரவித்தனர். மேலும் அக்கிராம மக்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவருக்கு தங்களது கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதற்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்