வாலிபரை தாக்கியவர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (30),  இவருக்கு பவித்ரா (25), என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை இரவு கனகராஜ், இவரது மனைவி பவித்ரா மற்றும் கனகராஜ் நண்பர் ஜெய்கணேஷ் (30) ,இவரது, மனைவி துர்காதேவி (24),  ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதையடுத்து, மறுநாள் தன் மனைவி பவித்ராவுக்கும், நண்பர் ஜெய்கணேஷ்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த கனகராஜ், பவித்ராவை அடித்து தகராறு செய்து அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், தன் மனைவி கோபித்து செல்வதற்கு ஜெய்கணேஷ், தான் காரணம் எனக்கூறி பீர் பாட்டிலை உடைத்து ஜெய்கணேஷை மீது பயங்கரமாக குத்தி உள்ளார். இதில், படுகாயமடைந்த ஜெய்கணேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து ஜெய்கணேஷ் மனைவி துர்காதேவி, செம்பட்டி காவல் துறையில், கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு . நாராயணன்,  மற்றும் காவல்துறையினர்,  வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist