திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கோட்டத்தில் பணிபுரியும் பத்திரிக்கை மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி,பருப்பு மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மீஞ்சூர் காவல் நிலைய வளாகத்தில் பொன்னேரி உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் தற்போது உள்ள கடும் வெயிலிலும் தங்களது பணியினை சிறப்பாக செய்துவரும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களும் அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்து இருக்கும், இந்த சூழலில் 35 பத்திரிகையாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களின் தொகுப்பினை ஏ.எஸ்.பி பவன்குமார் ரெட்டி ஏற்பாடு செய்து வழங்கினார்.
மேலும் கொரோனா தொற்று பரவாமல் பணி செய்வதற்கு முக கவசங்கள் வழங்கி கவனமாக பணிசெய்ய வாழ்த்தி அனுப்பினார். இந்த நிகழ்வில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் டோப்ரா,மீஞ்சூர் காவல் துறை ஆய்வாளர் மதியரசன்,உதவி காவல் துறை ஆய்வாளர் பாபு,கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்