சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், எஸ்.வி.மங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகள் கடத்த முயற்சி நடப்பதாக சமூக வலைதளத்தில் (What’s App) போலியான செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தைகள் கடத்தப்படுவதாக Whats App-ல் போலியான செய்தியை பரப்பியது சம்பந்தமாக சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒழுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவர் என தெரியவந்து விரைந்து சென்ற காவல்துறையினர் ஆனந்தவள்ளியை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.