மயிலாடுதுறை: பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று சட்டமன்ற தொகுதிகளை (மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார்) உள்ளடக்கிய மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு ஓடிசாவிலிருந்து மத்திய பாதுகாப்பு படையினர் இன்று 02.04.2024-ம் தேதி இரண்டு உதவி கமாண்டன்ட் தலைமையில் 176 பாதுகாப்பு படையினரை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடவுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணி, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவில் செய்ய வேண்டிய பணிகள், வாக்கு எண்ணும் மையம் மற்றும் காப்பு அறைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணி மற்றும் கொடி அணிவகுப்பு பற்றி விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மயிலாடுதுறை உட்கோட்டம், சீர்காழி உட்கோட்டம், மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் (பொறுப்பு-தேர்தல் கட்டுப்பாட்டு அறை) கலந்து கொண்டனர்.