மதுரை : மதுரை மாவட்டக் காவல் அலுவலகத்தில், மதுரை மற்றும் திண்டுக்கல் சரகங்களுக்கான சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் (07.06.2026)-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கூடுதல் காவல் துறை இயக்குனர் சட்டம்-ஒழுங்கு, திரு. டி.எஸ். அன்பு, IPS, தலைமை தாங்கினார்கள். இக்கூட்டத்தில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் (IGP), மதுரை மாநகரக் காவல் ஆணையர், மதுரை மற்றும் திண்டுக்கல் சரகங்களின் காவல்துறைத் துணைத் தலைவர்கள் (DIGs) மற்றும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் (SPs) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கலந்த ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் தமிழ்நாடு கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















