புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட் டம், இலுப்பூர் அருகே குப்பத்துப்பட்டியை சேர்ந்த இளைஞர் அதே ஊரை சேர்ந்த15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் அந்த சிறுமியுடன் தனிமையில் இருந்த போது செல்போனில் எடுக்கப்பட்ட ஆபாச படங்களை சிறுமியின் தாயிடம் காட்டி அந்த சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டியதாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப்பதிந்து இளைஞரை கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் குற்றவாளியான இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோ. பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் உத்தரவின்பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் இளைஞரை 30.08.2020 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.