செங்கல்பட்டு: விழுப்புரத்தில் இருந்து சென்னை கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் 23-12-2019-ம் தேதியன்று தந்தை ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சுமார் இரவு 11:30 மணியளவில் தந்தையானவர் பேருந்தில் இருந்து தேனீர் அருந்த இறங்கிய சென்றதில் பேருந்தை தவறவிட்டு அவர் செய்வது அறியாது தவித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட படாளம் காவல்நிலைய தலைமை காவலர் திரு.சந்திரசேகரன் அவர்கள் தனது இருசக்கர வாகனத்தில் மிக வேகமாக சென்று தந்தையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்குழந்தைகளுடன் சேர்த்து வைத்தார். இந்நிகழ்வை கண்ட பேருந்துப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தலைமைக்காவலரை வெகுவாக பாராட்டிய நன்றி தெரிவித்தனர்.