பெரம்பலூர் : தென்மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்த அதிகனமழையினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு வாழும் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பாக 300 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களாக அரிசி, கோதுமை, ரவை, டீ தூள், காபித்தூள், பிரட், பிஸ்கட்ஸ், மிளகாய் தூள், மல்லித்தூள்,எண்ணெய் உள்ளிட்ட ரூபாய்.2,67,800 மதிப்பிலான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் அறிவுறுத்தலின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.மதியழகன் (தலைமையிடம்) அவர்கள் கொடியசைத்து அணுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.A.பழனிச்சாமி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசுவரன் பெரம்பலூர் காவல் ஆய்வாளர் திரு.சக்திவேல் மங்களமேடு காவல் ஆய்வாளர் திரு.பாலாஜி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.