விழுப்புரம்: பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் பாலியல் குற்றங்கள் சம்பந்தமாகவும், குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உதவி எண்கள் CHILD HELP LINE 1098, WOMEN HELP LINE 181, SENIOR CITIZENS HELP LINE 14567, STUDENTS HELP LINE-14417, CYBER CRIME -1930. பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி JP மஹாலில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள், காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் திருமதி.கலைச்செல்வி, கோட்டகுப்பம் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திருமதி.அறிவழகி, திருமதி.சுதா மற்றும் காவலர்கள் தலைமையில் திருச்சிற்றம்பலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு. வில்லியம் மற்றும் குயிலாபாளையம் பள்ளி முதல்வர் திரு. குணசீலன் அவர்களின் உதவியுடன்திருச்சிற்றம்பலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் குயிலாப்பாளையம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 150 மாணவிகள் கலந்து கொண்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, காந்தி மேல்நிலைப்பள்ளி இருந்து புறப்பட்டு பாண்டி ரோடு, மயிலம் ரோடு வழியாக JP மஹால் வரை விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் JP மஹாலில் நடைபெற்றது.