சேலம் : சேலம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இதனையடுத்து வீராணம் காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டது இதன் அடிப்படையில் விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 40 நாட்கள் ஆன நிலையில் இந்த சம்பவம் நடப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமான 40 நாட்களில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.