மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் (160 சீர்காழி சட்டமன்ற தொகுதி, 161 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி, 162 பூம்புகார் சட்டமன்ற தொகுதி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 28 – மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது தொடர்பாக, இன்று 11.03.2024 பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடவுள்ள 85 Sector Police Officers-க்கு மயிலாடுதுறையில் உள்ள பதிபாலா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மயிலாடுதுறை உட்கோட்டம், மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு – 1, ஆய்வாளர்கள் தனிப்பிரிவு, தேர்தல் கட்டுபாட்டு அறை ஆகியோர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள 860 வாக்குச்சாவடிகளில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறமால் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு சிறப்பாக பணியாற்ற தக்க பயிற்சி அளிக்கப்பட்டது. சுதந்திரமான முறையிலும், நியாயமான முறையிலும் தேர்தல் நடத்துவதற்கு ஒவ்வொரு Sector Police Officers -ன் பங்கு குறித்தும், பதட்டத்திற்குரிய வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு கோரப்பட்டது.




















