மயிலாடுதுறை: பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊர்க்காவல் படையினர், ஓய்வுபெற்ற காவல்துறையினர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு இன்று 02.04.2024 தேர்தல்பணி குறித்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். பயிற்சியின் இறுதியில் அவர்களின் பணிக்குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.