தூத்துக்குடி : தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ் இ.கா.ப, அவர்களுக்கு இன்று காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கி கோயம்புத்தூர் மாநகர வடக்கு காவல்துறை துணை ஆணையராக தமிழ்நாடு அரசு நியமனம் – தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வாழ்த்து. காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள திரு. ஜி. சந்தீஷ் இ.கா.ப அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் மென்மேலும் பல பதவி உயர்வுகள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.