சென்னை : சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமம் மதுரா நகர் பகுதியில் சேர்ந்த முருகன் இவர் கேளம்பாக்கத்தில் கைப்பை தைக்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த ஐந்தாம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு கடைக்கி சென்றுள்ளார். மாலையில் அவரும் அவர் மனைவியும் வீடு திரும்பிய போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 சவரன் நகை கொள்ளை போனது தெரிய வந்தது. உடனே காவல் நிலையத்தில் புகார் செய்தார். கேளம்பாக்கம் போலீசார் சிசிடி கேமராவை ஆய்வு செய்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிடுவதும் வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும். தெரிய வந்தது அந்த நபர்களை கண்டறிந்து அவர்களின் செல் போன் சிக்னலை ஆய்வு செய்தபோது அவர்கள் ஒரு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே மாறுவேஷத்தைச் சேர்ந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பது தெரிய வந்தது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16.5 நகைகள் கடை பாறை மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்