திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி¸ ஆம்பூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள்¸ அவர்களுடைய பிரச்சனையை மனம் விட்டு பேச ஏதுவான சூழ்நிலையை உருவாக்கவும், மற்றும் மனுதாரர்களின் குழந்தைகள் எந்தவித ஒரு அச்சமும் இல்லாமல் விளையாடவும், இளைப்பாறவும் விளையாட்டுக் கருவிகள் அடங்கிய மனமகிழ் கூடம் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது.