திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்திய வேனை நகர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.உலகநாதன், காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 1.25 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா