திருநெல்வேலி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இணையவழி விண்ணப்பம் செய்வதற்கு உதவும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் “உதவி மையம்” செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். தங்களின் சந்தேகங்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
உதவி மைய எண் : 9498101762
நாள் : 08.03.2022 முதல் 07.04.2022 வரை
இடம் : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.