கோவை : கோவை மாநகர ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளான சரவணம்பட்டி, பீலமேடு, சிங்காநல்லூர், போத்தனூர், மற்றும் குனியமுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தோட்டங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் மற்ற பகுதிகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக காவல்துறை துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் (சட்டம் ஒழுங்கு) அவர்களின் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, சட்ட விரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து செய்து பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்


















