கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரி TO குப்பம் ரோடு வரட்டனபள்ளி பாலாஜி தியேட்டர் அருகில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி கற்கள் 1 யூனிட் இருந்தது. மேற்கண்ட வாகனத்தை பறிமுதல் செய்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.















