தூத்துக்குடி : தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல மருதூர் பகுதியில், உள்ள முனியசாமி கோவிலில், கடந்த (15.07.2022), அன்று 11 பித்தளை மணிகள் திருடுபோனது. இதுகுறித்து அந்தக் கோயிலின் தர்மகர்த்தாவான மேல மருதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த மேகலிங்கம் மகன் கருப்பசாமி (59), என்பவர் அளித்த புகாரின் பேரில், தருவைகுளம் காவல் நிலைய காவல்துறையினர் , விசாரணை மேற்கொண்டதில், மேல மருதூர் புளியமரத்து தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முருகானந்தம் (எ) மூக்காண்டி (28), என்பவர் மேற்படி கோயிலில் பித்தளை மணிகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு . சரவணன், குற்றவாளி முருகானந்தம் (எ) மூக்காண்டி, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 9,000/- மதிப்பிலான 11 பித்தளை மணிகளையும் பறிமுதல் செய்தார்.