நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில், உள்ள வேதபுரீஸ்வரர் கோவில்கருவறை அருகே வைக்கப்பட்டிருந்த குடங்கள், சொம்புகள், விளக்குகள் போன்ற பொருட்கள், மாயமாகி இருந்தன. மதில் சுவர் ஏறி மர்ம நபர்கள், மூலவர் சன்னதி கதவுகளின்பூட்டை உடைத்து, திருடியுள்ளனர். கோவில் கணக்கர் வினோத், (37), புகாரின்படி, வலிவலம் காவல் துறையினர் , விசாரிக்கின்றனர்.