புதுக்கோட்டை : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா அவர்களின் அறிவுறுத்தலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் மற்றும் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் R.முத்துராஜா அவர்களின் உத்தரவின் பேரிலும் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் காவல் ஆய்வாளர் திருமதி.ஹேமலதா அவர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து வடகாடு காவல் சரகம் வாணக்கன்காடு பெரியவாடி கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் கேடயம் (SHIELD) திட்டத்தினால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மற்றும் வெர்ச்சுவல் காப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் கேடயம் (SHIELD) திட்டம், VIRTUAL COP தொடர்பாக விழிப்புணர்வும் மற்றும் கேடயம் திட்டத்தின் உதவி தொலைபேசி எண்கள் 6383071800 , 9384501999 குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா