புதுக்கோட்டை : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜி சரவணன் அவர்கள் மற்றும் கீரனூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.D.சிவசுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கீழப்பட்டி கிராமத்தில் “கேடயம் திட்டம்” குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்தும் கொரோனோ நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கேடயம் திட்டத்தின் உதவி தொலைபேசி எண்கள் 6383071600 , 9384501999 குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா