புதுக்கோட்டை : திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42), இவர் ஜெயமங்கலம் அருகே 10 சென்ட் காலி இடம் வாங்கியுள்ளார். அதில் பாறைகளைத் தகர்க்க, அனுமதியின்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் வடகரையைச் சேர்ந்த முருகன் (45) இவரது நண்பரான, எருமலைநாயக்கன் பட்டியை சேர்ந்த, இளவரசன் (22), உதவியுடன், (45), ஜெலட்டின் குச்சிகள், 45 டெட்டனேட்டர்கள், காலி இடத்தில் துளையிட்டு வெடிக்க பதுக்கி வைத்திருந்தனர். இதனையறிந்து அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், ஜெயமங்கலம் வி.ஏ.ஓ., அருள்குமார் புகாரில், ஜெயமங்கலம்காவல் துறையினர், மணிகண்டன், இளவரசனை கைது செய்து, வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். மணிகண்டனை தேடி வருகின்றனர்.