கணவருடன் சென்ற மனைவி பலி

சேலம்:   மாவட்டம் சங்ககிரி பக்கம்  உள்ள சின்ன கவுண்டனூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50) ,இவரது மனைவி உமா மகேஸ்வரி( வயது 45),  இவர்கள் இருவரும் நேற்று காலையில் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற பைக்கில் வந்தனர் ,சிகிச்சை முடிந்து பைக்கில் சேலம் திரும்பினார்கள். பைக்கை கணவர் பழனிசாமி ஓட்டினார் உமாமகேஸ்வரி,  பின்னால் இருந்தார். கனியூர் டோல் கேட் அருகே சென்றபோது திடீரென பைக் நிலைதடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் விமுந்தது.

  இதில் உமாமகேஸ்வரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். கணவரை பழனிச்சாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார் இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ துரை, பைக் ஓட்டி வந்த கணவர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist