திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நபர்களுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக் கூடாது எனவும், அரசு கூறிய தளர்வுகளை உரிய முறையில் பின்பற்றவேண்டும், ஆட்டோவில் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும், ஆட்டோவில் வரும் நபர்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளித்து பின் அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் வாகன ஓட்டிகளுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள், மேலும் பஜாரில் உள்ள கடை உரிமையாளர்களிடம் முககவசங்களை வழங்கி வரும் காலங்களில் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்தி கை கழுவ வேண்டும் என்றும் மேலும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம்! கொரோனாவை வெல்வோம்!! என அறிவுரைகள் வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்