IAS, IPS தேர்வுக்கு படிப்பவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் உணவு, தங்குமிடம் வழங்கி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தேர்வாணையம் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இருந்து இளநிலை பட்டம் ஒன்றை பெற்றெடுக்க வேண்டும்.
வயதுவரம்பு : அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது (21), ஆக இருக்க வேண்டும் இதர வகுப்பினர் (32), வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும் SC, ST, பிரிவினர் (37), வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர் மரபினர் வகுப்பினர்கள் (35), வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் (42), வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையானவை : ஏதாவது ஒரு இளநிலை பட்டம் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ
விண்ணப்பிக்க கடைசி நாள் : (27/10/2022)
அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் கட்டணம் இல்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டம் உள்ள வகுப்பறைகள், ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம் 325 முழு நேர தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள் கோயம்பத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழு நேர தேர்வர்களை முதல் நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் மதிய தேர்வாணைய குழு UPSC நடத்தும் குடிமை பணிக்கான முதல்நிலை தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மைய இணையதளம் CIVILDERVICECOACHING.COM வாயிலாக (7/10/2022), முதல் (27/10/2022), வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல் நிலை தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணைய குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதி உடைய நபர்கள் (13/11/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் முதல் நிலை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இன வாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர், 2022 டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
விண்ணப்பிக்க : http://www.civilservicecoaching.com/