கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதிகளில் இயங்கிவரும் NATIONAL COLLATERAL MANAGEMENT SERVICE LTD என்றா தனியார் குடோனை நிர்வகித்து வரும் ஜெயராமன் என்பவர் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு வந்து சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் சில நபர்களோடு சேர்ந்து குடோன்களை வாடகைக்கு எடுத்து தவறான வழியில் ஏமாற்றி வங்கியில் சுமார் 24 கோடிக்கும் மேல் கடன் பெற்று ஏமாற்றியுள்ளதாக கொடுத்த புகாரினை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் இவ்வழக்கினை சின்னசேலம் காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட குற்ற பிரிவு விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பரமணியன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம் விசாரணை மேற்கொண்டார். சின்னசேலம் கூகையூர் ரோடு நாராயணன் நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் பெரியசாமி என்பவர் சரண்யா கடலை உடைப்பு மற்றும் ஆயில் மில் ஓனராக இருந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி பகுதியில் 36 குடோன்களை வாடகைக்கு எடுத்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலக்கடலைகளை குடோனில் வைத்து ஆத்தூர் ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் சின்னசேலம் லட்சுமி விலாஸ் வங்கியில் அடமானக்கடனான மொத்தம் 46 நபர்களுக்கு 24,33,64,251/- ரூபாய் கடன் பெற்றுள்ளார்கள். அதில் பெரியசாமி என்பவர் தனது மனைவி தங்கம் மகன் பாலுசாமி மகள் சரண்யா தகப்பனார் தங்கவேல் மற்றும் அவருடைய 15 உறவினர்கள், 28 பணியாளரகள் ஆகியோர்கள் மீது அடமானக்கடன் பெற்றுள்ளார்.
இவர் பல குடோன்களின் கடலை மூட்டைகளை வைக்காமலும், குறைவான மூட்டைகளை வைத்தும் NCML பணியாளர்கள் உதவியுடன் கடன் பெற்றும், சின்னசேலம் லட்சுமி விலாஸ் வங்கியில் பெற்ற கடனை முழுவதும் மறைத்து அதே பொருட்களுக்கு மீண்டும் கடன் பெற்றும், சின்னசேலம் பகுதியில் உள்ள குடோன்களில் இருந்து மூட்டைகளை திருட்டுதனமாக வேறு சாவியை பயன்படுத்தி வேறோரு குடோன்களில் வைத்து கடன் பெற்றும், ஒரு குடோனை பல குடோன்கள் போல் காட்டி பெரியசாமி கூட்டுசதிகளில் மூளையாக இருந்து தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மட்டுமே அதிகபடியான கடன் தொகைகளை பெற்றுள்ளது தெரியவருகிறது. எனவே இக்குற்ற செயலில் ஈடுபட்டு சுமார் 24,33,64,251/- கோடி ரூபாய் மோசடி செய்த குற்றவாளிகளான பெரியசாமி த/பெ தங்கவேல், நாராயணன் நகர், சின்னசேலம் ,பாலுசாமி த/பெ பெரியசாமி, நாராயணன் நகர், சின்னசேலம் மற்றும் இவர்களுக்கு துணையாக இருந்த NATIONAL COLLATERAL MANAGEMENT SERVICES LTD 3.கிருஷ்ணன் (CLUSTER CONTROLLER) த/பெ மாணிக்கம், தகரை, சின்னசேலம் 4.ரமேஷ் (CLUSTER MANAGER) த/பெ ராஜமாணிக்கம், நாகுப்பம், சின்னசேலம் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். இவ்வழக்கில் சிறப்பான முறையில் விசராணை செய்து நான்கு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பரமணியன் தலைமையிலான காவல்துறையினரை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார் .