கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் (28.02.2023)-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்,. அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் பராமரிக்கப்படும் முக்கிய பதிவேடுகள் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு கோப்புகள், ஆவணங்கள், உடைபொருட்கள் மற்றும் மனுபதிவேடு உள்ளிட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். காவலர்கள் குறைநிறைகள் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார். பணியினை பொறுப்புடனும், நேர்மையுடனும், திறம்பட செயல்பட வேண்டும் எனவும் காவல் நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிபுறம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் கோடை காலங்களில் திருப்பாலபந்தல் காவல் நிலையத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களின் தாகத்தினை தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்த ஆய்வின் போது திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பழனி அவர்கள் மற்றும் காவல் நிலைய காவல் ஆளிநார்கள் உடனிருந்தனர்.