கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை தடுக்க தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (05.01.2023)-ந் தேதி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை காவலர்கள் கல்வராயன்மலை கிளாக்காடு அருகே சோதனையில் ஈடுப்பட்டபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கஞ்சா விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது பின்பு மேற்படி குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்