கள்ளக்குறிச்சி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் குறிப்பாணையின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் அலுவலகங்கள் ஆயுதப்படை மற்றும் குடியிருப்புகளில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் (31.12.2022)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்,. இ.கா.ப அவர்களின் தலைமையில் சுமார் 200 காவல் துறையினர் இணைந்து கல்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் வரும் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் கொண்டுவரும் பாலித்தீன் பைகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை மலைப்பகுதிகளில் வீசி செல்வதால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு அங்கு வாழும் விலங்குகளுக்கு தீங்கு ஏற்படுவதாலும் அங்கு இருந்த சுமார் 1,500 கிலோ மக்கா குப்பைகள், பாலித்தீன் பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அகற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட நகராட்சி குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டது.
மேலும் சுற்றுலாவிற்கு வந்தவர்களிடம் மலைப்பகுதிகளில் வீசப்படும் மக்கா குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜவஹர்லால், கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிரான குற்ற தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருமேணி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம், கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.