இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபா சத்யன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, (09/09/2022) நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரென்டடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னம்பாடி நரிக்குறவர் காலனி, ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, இரத்தனகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி, கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திமிரி ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்