கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் (15) வயது சிறுமி. இந்த சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இதனிடையே வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் பர்கூர் அடுத்த தபால்மேடு இந்திரா நகரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் பிரேம்குமார் (22) என்பவர் சிறுமியை கடத்திசென்றது தெரியவந்தது. அவர் சிறுமியை பர்கூர் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து பிரேம்குமாரை கைது செய்யக்கோரி அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்