கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் கைது செய்ய தனிப்படை அமைத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் (11.03.2023)-ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கார்திக் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதி ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்கள் சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டனந்தல் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் (35), த/பெ கந்தசாமி என்பவர் வீட்டின் பின்புறத்தில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த தலா 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 லாரி டியூபில் சுமார் 165 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்துருந்த நபரை கைது செய்து. அவர் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்து குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.