சேலம் : சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலைய சரகம் நாச்சினம்பட்டி நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாராயணன்(58), என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சின்னபையன்(76), என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த (08/08/2011), அன்று தகராறு ஏற்பட்டு இரவு சின்னபையன் அவரது குடும்பத்தார்கள் ஒன்று சேர்ந்து நாராயணனை கொடுவாளார் வெட்டி கொலை செய்தனர்.
கொலை செய்த குற்றத்திற்காக நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொடுத்த புகாரின் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பிரிவு இதசவாக வழக்கு பதிவு செய்து இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு நிலுவையில், இருந்த நிலையில் குற்றவாளி சின்னப்பையன் கடந்த (15/04/2020), அன்று இறந்துவிட்டார். மற்ற குற்றவாளிகள் மீது சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.ரவி, அவர்கள் குற்றவாளிகள் வடிவேல்(50) ,கமலா(71), மற்றும் புஷ்பவல்லி(39), ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் அபராதம் ரூபாய் 5,000 விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்